மாணவனால் கண்டறியப்பட்ட ” வாட்ஸ் ஆப் தவறு “

வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள தவறுகளை கண்டறிந்த கேரள மாணவன் அனந்தகிருஷ்ணா, வயது  19. ஆலப்புழாவைச் சேர்ந்த இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் பயின்று வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் இருந்த தவறுகளை கண்டுபிடித்து பேஸ்புக்கிற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தவறு என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியிடவில்லை. ஆனால் அது, ஒருவர் அனுப்பிய தகவலை அவருக்கே தெரியாமல் அழிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனை தெரிவித்த அந்த மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் 34 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் புகழ்மிக்கவர்களின் பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் சேர்க்கப்படும் என்றும் பேஸ்புக் உறுதி அளித்துள்ளது.