வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் கோவை மண்டல துணை வட்டாட்சியர் கோவை தெற்கு வட்டம் உமாமகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பற்றி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலமாகவும் பதாகைகள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.

விழிப்புணர்வு பேரணிக்காக ஏற்பாட்டினை யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர், துணை பேராசிரியர் பிரபு, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை பேராசிரியர் ஹரி ஆனந்த் அவர்களும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். இந் நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.