மூளைச்சாவடைந்த 47 வயதுடைய ஊழியர் 6 பேருக்கு  மறுவாழ்வு அளித்தார்!

A.மதியழகன்   வயது 47 இவர சூலூர்  குருவம்மாள் நகரில்   அவரது மனைவி மோகன மகள் நிவேதிதா மற்றும் மகன் தனுஷ், அவர்களுடன்  வசித்துவந்தார்.  இவர் கடந்த மாதம்   இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டதின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது மனைவியரிடம் அக்கா மகன் உமாசங்கர் ஆகியோர் A.மதியழகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.  அவரது சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு  வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல G பழனிசாமி அவர்கள்  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய மதியழகன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.