கே.ஐ.டி-யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை அருகே உள்ள கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியும் சென்னையை சார்ந்த டிஸிஸ் நிறுவனத்தின் இயக்குனர் – HR சசிகாந்த் ஜெயராமன் மற்றும் கல்லூரி துணை தலைவர் இந்து முருகேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி, மாணவ, மாணவியரின் கற்றல், செயல்திறன் மேம்பாட்டு, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய துறைகளில் சர்வதேச தரத்தை எட்ட, நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்றைய சூழலில் எலக்ட்ரிக்கல்,  எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், பயோமெடிக்கல்,  பயோடெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையிலும், சம்மந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத் திட்ட வரைவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழில்நுட்பப் பயிற்சி எடுத்தல், அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொண்டு தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்தல் என மாணவ  நலன் சார்ந்தவற்றைப் பாடத்திட்டத்தோடு இணைந்தளிக்க வேண்டும் என்று முடிவு செய்த கே.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி, மேற்குறிப்பிட்டத் துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் தொழில் துறை எதிர்பார்ப்புகள் மற்றும் கல்வி பாடத்திட்டங்களுக்கு இடையேயான இடைவெளிகளை இணைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகின்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணைத் தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி செயல் அறங்காவலர் சூர்யா, கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரி டீன் சுரேஷ்,  கல்லூரி Placement officer கார்த்திக் அபிநாத், கல்லூரி அனைத்துத் துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.