ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

காரமடை டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் வே.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் கணினிசார் வணிகவியல் துறை மாணவன் செல்வன் ரஞ்சித் தலைமையில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் இதில் பங்கேற்று எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியில் இருந்து கல்லூரி மைதானம் வரை ஒலிம்பிக் ஜோதியுடன் ஓடிவந்து  மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில்  எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியின் முதல்வர் லூசி தங்கராணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி பல்வகை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் திருப்பதி அவர்கள் செய்திருந்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.