ஒஸ்மென் ஸ்மார்ட்சிட்டி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவையில் ஒஸ்மென் ஸ்மார்ட்சிட்டி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒஸ்மென் ஸ்மார்ட்சிட்டி சங்க தலைவராக ரொசாரியோ லாசரும், செயளாலராக டி.செந்தில் முருகனும், பொருளாலராக கிருபாகரனும் மற்றும் இதர நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேற்கு மாவட்ட ஆளுநர் எஸ்.எம். சரவணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிவியேற்ற நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.எம். கைலாசம் உடணபி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜி.ஏ.ராம்ச்சந்திரன் மாவட்ட ஆளுநர் தேர்வு பழனியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மேலும் ஒஸ்மென் மேற்கு மாவட்டத்திலுள்ள மற்ற சங்க நிர்வாகிகளும் வாழ்த்தி பேசினர். பிஎன்.நல்லசாமி சங்கத்தின் வெப்சைட்டினை துவங்கி வைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் என்எஸ்.சக்திவேல் மற்றும் ஜி.ஆர்.நிரஞ்சன்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் செயலர் டி.செந்தில் முருகன் நன்றியுரையாற்றினார்.