“வெல்வதற்கே வாழ்க்கை” புத்தக வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசனின் 60-வது புத்தமாகிய “வெல்வதற்கே வாழ்க்கை” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று (16.6.17) கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி நூலினை வெளியிட, முதல் பிரதியை சுந்தராபுரம் ஹோட்டல் ஸ்ரீ ஆனந்தாஸின் பங்குதாரர் K.வெங்கடேஷ் பெற்றுக்கொள்கிறார். உடன் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் முனைவர் P.பாபா.ஞானகுமார், துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் R.விஜயசாமுண்டீஸ்வரி மற்றும் ஜெயராம் பிரபு.