கோவை, கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த மில் தொழிலாளி 9 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்!

திருப்பூர்  மாவட்டம், பாப்புலர் மில் காலனியை சேர்ந்த திரு.N.செல்வராஜ்  (வயது 43),  கடந்த 12-ஆம் தேதி பல்லடம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக  சூலூர் கே.எம்.சி.எச்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி ரோடு கே.எம்.சி.எச்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் அவருக்கு  13-ஆம் தேதி  மூளைச் சாவு எற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது அண்ணன் ராஜேந்திரன், N.செல்வராஜ்  உடல் உறுப்புகளை தானம் செய்தனர். கல்லீரல் மற்றும்  ஒரு சிறுநீரகம்  கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம்  கோவை  SPT  மருத்துவமனைக்கும். தோல் மற்றும் எலும்பு கோவை கங்கா மருத்துவமனைக்கும். இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். கண்கள் அரவிந்த் கண்  மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல G பழனிசாமி  கூறுகையில், ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும், N.செல்வராஜ் குடும்பத்திற்கு அவரது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.